Monday, November 25, 2013


   யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர்  (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும்  அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில்  மனு நீதி  பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.
 ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

விசய கூழங்கச் சக்கரவத்தி
குல சேகர சிங்கையாரியன்
விக்கிரம சிங்கையாரியன்
விரோதய சிங்கையாரியன்
மார்த்தாண்ட சிங்கையாரியன்
செயவீர சிங்கையாரியன்
குண பூசன சிங்கையாரியன்
குண வீர சிங்கையாரியன்
கனக சூரிய சிங்கையாரியன்
எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.
  யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின்  காலத்தில்  நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை    செய  சிங்கையாரியனென்று    கைலாயமாலை  குறிப்பிட்டிருக்கிறது.   மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச்   சோதிடர்கள்  தேர்ந்து சொல்லிய   நன் முகூர்த்தத்தில் அத்திவாரம்போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா  நதித்தீர்த்தமும்   அழைப்பித்துக்   கலந்து  விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி,   குதிரைப்பந்தி,   சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு  சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என  மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.
   இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண    இராச்சியமானது,போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி   உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது.  இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.

  சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண   இராச்சியத்திலிருந்து இன்றுவரை    தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த CLASS ISSAC என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும்  இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட  மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.
  சிங்கையாரியர்களால்    யாழ்ப்பாணத்தில்   10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்  அடிமை   குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில்  பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும்    பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது.    சாதிகளாக பஞசமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.
யாழ்ப்பாண இராச்சியமானது 15 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயரின் 40 வருட ஆட்சிக்குப் பிற்பாடு ஒல்லாந்தர் 1658 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சம்பவம் குறித்து ' யாழ்ப்பாண வைபவ மாலையில்' உள்ள கீழ் வரும் செய்யுள் விபரிக்கிறது.

திருமருவு யாழ்ப்பாண நாட்டையாண்ட
சிங்கையாரியன் குலத்தை தீங்கு செய்து
பெருமையுடன் காலயுத்தி யானி மாசம்
பிலிப்பனெனும் பறங்கிக்கிளை யரசை யாண்டு
குருநெறியும் மனுநெறியுமில்லா தாக்கிக்
கொடுமையுடன் நாற்பதாண்டளவும் போக்க
உருமருவு முதயகிரி யிரவுபோல
வுலாந்தேக மன்னவன் வந்துதிப்பன்தானே

யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர் (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும் அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில் மனு நீதி பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.

ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

1. விசய கூழங்கச் சக்கரவத்தி
2. குல சேகர சிங்கையாரியன்
3. விக்கிரம சிங்கையாரியன்
4. விரோதய சிங்கையாரியன்
5. மார்த்தாண்ட சிங்கையாரியன்
6. செயவீர சிங்கையாரியன்
7. குண பூசன சிங்கையாரியன்
8. குண வீர சிங்கையாரியன்
9. கனக சூரிய சிங்கையாரியன்

எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.
யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின் காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை செய சிங்கையாரியனென்று கைலாயமாலை குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த்தத்தில் அத்திவாரம் போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா நதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.

இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண இராச்சியமானது, போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது. இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.

சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இன்றுவரை தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த உடயளள ளைளயஉள என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.

சிங்கையாரியர்களால் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அடிமை குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில் பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும் பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்ரப்பட்டு வருகிறது. சாதிகளாக பஞ்சமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.

சமூக ரீதியாகப் பேணிவந்த சாதிவழமைச் சட்டத்தை ஐரோப்பியர்கள் கண்டும் காணதவாறும் இருந்து வந்துள்ளனர். யாழ்மேலாதிக்க சமூகத்தின் ஆதரவின் அவசியம் கருதியே ஐரோப்பியர்கள் சாதிவழமைச்சட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லi. இருப்பினும் ஐNhப்பியர்களே வட-கிழக்கு வாழ் தலித் சுமூகங்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான பாதையை திறந்தவர்கள்.இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சாதிப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களது சொந்த நாடான இலங்கையில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் தமது புனித மரபுகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றனர். இந்த சாதியச் சமூகச் சகதிக்குள் வாழ்ந்து கொண்டு!! பேரினவாதம், மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், என்றெல்லாம் பேசிவருகிறோம். இவ்வாறாக இன்று வரை புறனாநூற்றுப் புகழ்பாடும் யாழ்ப்பாண சாதிய இராச்சியத்தில் இன்னும்கூட????.......... தொடரும்

0 comments:

Post a Comment